டாஸ்மாக் அருகே லோடு லாரி... மின்னல் வேகத்தில் குவார்ட்டர் பாட்டில்களை தூக்கிச் சென்ற இளைஞர்கள்.. பணியாளர்கள் அதிர்ச்சி!

 
டாஸ்மாக்

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகத்தின் மதுபான மொத்த கிடங்கில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விற்பனைக்காக மதுபாட்டில்கள் லாரிகளில் வருவது வழக்கம். 

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டம் மகாதானத் தெருவில் அரசுக்கு சொந்தமான 5646 எண் கொண்ட டாஸ்மாக் மதுபானக் கடைக்கு நேற்று மாலை லாரியில் மது பாட்டில்கள் வந்து இறங்கியது. அதனை டாஸ்மாக் கடை ஊழியர்கள் டாஸ்மார்க் கடைக்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். 

டாஸ்மாக்

லாரியில் முன்பகுதியில் இருக்கும் அட்டைபெட்டியை லாரியின் விளிம்பு பகுதியில் ஒருவர் வைத்துள்ளார். கீழே நிற்கும் ஒருவர் அந்த அட்டை பெட்டியை எடுத்து மதுக்கடையில் வைக்கிறார். இப்படி பணி நடைபெற்றது.

அதனை நோட்டமிட்டு கொண்டிருந்த இளைஞர்கள் இருவர். லாரியிலிருந்து எடுத்து வைக்கப்பட்ட 48 குவார்ட்டர் பாட்டில்கள் அடங்கிய (பிலாக் பேர்ல்) ஒரு பாக்ஸ் மது பாட்டில்களை குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு கண்ணிமைக்கும் நொடியில் பைக்கில் தப்பினர்.

இதனை கண்டு லாரியிலிருந்த ஊழியர் இறங்கி விரட்டி சென்றார். எனினும் அவர்கள் மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பியதால் அவர்களை பிடிக்க முடியவில்லை. திருடி சென்ற மது பாட்டில் ஒன்றின் விலை 130 ரூபாய் எனவும், 48 மதுபாட்டில்களின் மொத்த விலை 6140 ரூபாய் எனவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

டாஸ்மாக்

இது குறித்து டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர் சுரேந்திரன் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் சிசிடிவி பதிவை வைத்து பைக்கில் தப்பிய இளைஞர்களை தேடி வருகின்றனர். இளைஞர்கள் மது பாட்டில்களை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web