இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... பத்திரமா இருங்க!

தமிழகத்தில் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி தீர்த்த நிலையில், பல மாவட்டங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டெல்லியில் மூச்சு திணறுது என்று டெல்லி மக்கள் தினந்தோறும் கதறிக் கொண்டிருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப்படாமல் பட்டாசுகளை வெடித்து தீர்த்துள்ளோம். 2 மணி நேர ரூல்ஸ் எல்லாம் நம்மை எதுவும் செய்யாது என்று பல இடங்களில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர் பொதுமக்கள்.
இந்நிலையில், இன்று தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் அதே நேரத்தில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகி இருப்பதால் இன்று மழை வெளுத்து வாங்கப் போகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. அதே பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கலாம். மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி குமரிக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது.
இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ,ஈரோடு ,சேலம், நாமக்கல், தென்காசி ,சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!