கள்ளக்குறிச்சி விஷச்சாராயத்தில் வெறும் தண்ணீரில் மெத்தனால்... குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!

 
மெத்தனால்


 
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாராயம் குடித்து 65 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் வழக்கு  சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு  காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளச்சாராயம்

 இந்நிலையில் தற்போது கைது செய்யப்பட்ட மாதேஷிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதன்படி  ஆன்லைன் மூலம் மெத்தனால் விற்பனை செய்யும் தொழிற்சாலைகளை கண்டுபிடித்து ஜிஎஸ்டி வரி இல்லாமல் மாதேஷ் மெத்தனால் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

கள்ளச்சாராயம் பலி
இவரிடமிருந்து சின்னதுரை மெத்தனால் வாங்கி  சாராயத்தை சேர்க்காமல் தண்ணீரில் வெறும் மெத்தனால் மட்டுமே கலந்து விற்பனை செய்துள்ளார். இவரிடமிருந்து கோவிந்தராஜனும்  மெத்தனாலை வாங்கி தண்ணீர் கலந்து விற்பனை செய்துள்ளார். பொதுவாக சாராயத்தை காய்ச்சி அதில் போதைக்காக மெத்தனால் கலக்கப்படுவது வழக்கம். ஆனால் இங்கு சாராயமே இல்லாமல் தண்ணீரில் வெறும் மெத்தனால் மட்டுமே கலந்து விற்பனை செய்துள்ளனர். இதனால் அத்தனை உயிர்ப்பலிகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பது குறித்து  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web