தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியால் எந்த பாதிப்பும் இல்லை!

 
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (29.06.2021) கோவிஷீல்டு தடுப்பூசி போடும் இடங்கள்

 அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியால் உயிரிழப்புகளும் பக்கவிளைவுகளும் ஏற்படுவதாக சுமார் 51 பேர் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்நிலையில், பிரிட்டன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணத்தில் 'COVISHIELD' தடுப்பூசி  மிக அரிதாக TTS என்ற ரத்த உறைதல் பக்க விளைவை ஏற்படுத்தும் என AstraZeneca தெரிவித்துள்ளது.  

கோவிஷீல்டு

இந்தியா முழுவதும்  சுமார் 174.94 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.  கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படலாம் என அந்த தடுப்பூசியை தயாரித்த அஸ்ட்ராஜெனெகா இங்கிலாந்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பலரும் தங்களுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என பீதியில் உறைந்துள்ளனர். 
இந்நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தை பொறுத்தவரை  யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவதே மாநில அரசின் நிலைப்பாடு – அமைச்சர் மா. சுப்பிரமணியன்

இது குறித்து  “எந்த தடுப்பூசியாக இருந்தாலும் ஒருவருடைய உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்துத்தான் இருக்கும். கோவிஷீல்டு தடுப்பூசியால் தமிழகத்தில் யாருக்கும் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. யாரும் பதட்டப்படத் தேவையில்லை.உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்து உடலை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web