தாசில்தார் அலுவலகத்தில் கத்தியுடன் நுழைந்த நபர்... தாக்குதல் நடத்தி அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல்!

 
திருப்போரூர்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெங்கடேசன் என்பவர் நில அளவை வட்டத் துணை ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகம் எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று பட்டிபுலம் கிராமத்தைச் சேர்ந்த தனசேகர் என்பவர் அலுவலகத்துக்கு வந்திருந்தார்.

அப்போது, உதவியாளரிடம் திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் புல உதவியாளரிடம் வருவாய் ஆய்வாளரை சந்திக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் மீட்டிங்கில் இருப்பதாக கூறியதாகவும், இதனால் இருவருக்கிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

திருப்போரூர்

இந்நிலையில் திருப்போரூர் நில அளவை வட்டத் துணை ஆய்வாளர் வெங்கடேசன், தனசேகரை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டார். அப்போது, தனசேகர் நில அளவை வட்டத் துணை ஆய்வாளரை தகாத வார்த்தைகளால் கூறி, நீ யாருடா என்ன கேட்க, காவல் நிலையம் சென்றால் காவல் நிலையத்தை கொளுத்தி விடுவேன், நீ வெளியே வா உன்னை கொலை செய்து விடுகிறேன், என்று கூறியுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியே சென்ற அவர் சிறிது நேரத்தில், கையில் கத்தியுடன்  மீணடும் வட்டாட்சியர் அலுவலகம் வந்து வெளியே உள்ள கண்ணாடி கதவுகளை கத்தியால் அடித்து உடைத்தார். மேலும் நில அளவை வட்டத் துணை ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் புல உதவியாளர் இருவரையும் நீங்கள் வெளியே வாருங்கள், உங்களை கொலை செய்து விடுகிறேன் என்று கத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திருப்போரூர்

இதனிடையே, தகவலின்பேரில் அங்கு போலீசார் வருவதை அறிந்த தனசேகர் தப்பிச் சென்றுள்ளார். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவரை தேடி வருகின்றனர்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

From around the web