இன்று முதல் 3 நாட்களுக்கு ராக்போர்ட் உட்பட எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளில் மாற்றம்.. குறிச்சிக்கோங்க!

 
ரயில் முன்பதிவு

இன்று முதல் அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு, அதாவது நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை எழும்பூரில் இருந்து சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படாது. அதற்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும். சென்னையில் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மின்சார ரயில்

இந்நிலையில் சென்னை எழும்பூர் - விழுப்புரம்  வழித்தடத்தில் பரங்கிமலை ரயில் பாதை மேம்பாட்டு  பணிகள் நடைபெற்று வருவதால் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படுவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2 வாரங்களாக  மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. ஒரு சில ரயில் சேவைகள்  ரத்தும் செய்யப்பட்டன.

 ரயில் முன்பதிவு

இன்று முதல் நவம்பர்  3 ம் தேதி வரை சென்னை எழும்பூரில் இருந்து இரவு நேரத்தில் புறப்படும் மங்களூர் எக்ஸ்பிரஸ், திருச்சி வரை செல்லும் ராக்போர்ட் எக்ஸ்பிரஸ்,மன்னை எக்ஸ்பிரஸ் ஆகியவை தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  நவம்பர்  3ம் தேதி வரை, தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே இரவு 10.40 முதல் 11.55 வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web