“இது தான் கடைசி ஒலிம்பிக்...” கதறியழுத இந்திய வீராங்கனை அஸ்வினி... தனது ஒலிம்பிக் ஓய்வை அறிவித்தார்!

 
அஸ்வினி

இது தான் என்னுடைய கடைசி ஒலிம்பிக் போட்டி. அடுத்த ஒலிம்பிக் போட்டியில் நான் விளையாட மாட்டேன் என்று இந்திய பேட்மிண்டன் விளையாட்டு வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா தெரிவித்துள்ளது பேட்மிண்டன் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் மகளிர் இரட்டையர் பேட்மிண்டன் போட்டியில் அஸ்வினி பொன்னாப்பாவும் அவரது ஜோடி தனிஷா க்ராஸ்டோவும் தொடர்ந்து மூன்றாவது தோல்வியை சந்தித்ததை அடுத்து, தனது கடைசி ஒலிம்பிக் போட்டியில் விளையாடியதாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை அஸ்வினி பொன்னப்பா கண்ணீர் விட்டு அழுதார். 

அஸ்வினி மற்றும் தனிஷா ஜோடி, செவ்வாய்கிழமை நடந்த சி பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் செட்யானா மபாசா மற்றும் ஏஞ்சலா யுவிடம் 15-21 10-21 என்ற கணக்கில் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தது.

இந்த இந்திய ஜோடி, தங்களின் மூன்று குழுப் போட்டிகளிலும் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்த பிறகு, தொடர் தோல்விகளுடன் தங்களது ஒலிம்பிக் 2024 பயணத்தை முடித்துக் கொண்டனர். 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் விளையாட விரும்புகிறீர்களா என்று கேட்டபோது, ​​"இது எனது கடைசி ஒலிம்பிக் போட்டி. ஆனால் தனிஷா இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும்" என்று தனது மூன்றாவது ஒலிம்பிக்கில் விளையாடிக் கொண்டிருந்த 34 வயதான இந்திய வீராங்கனை அஷ்வினி கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web