இன்று திறக்கப்பட உள்ள தூத்துக்குடி விமான நிலையத்தின் சிறப்பம்சங்கள்!
தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று ஜூலை 26, 2025 இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்காக பாதுகாப்பு பணியில் 2100 போலீசார் ஈடுபட்டுள்ளனர். ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்தில் விரிவாக்கப்பட்ட இந்த விமான நிலையத்தில் 2 தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் உள்ளன.
தூத்துக்குடியிலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள வாகைகுளத்தில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை, பெங்களூரு, மற்றும் பிற முக்கிய நகரங்களுடன் தற்போது இணைக்கப்பட்டுள்ளது. மும்பை, தில்லி, ஹைதராபாத் போன்ற இடங்களுக்கு கூடுதல் சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக முக்கியமான விமான நிலையமாக தூத்துக்குடி விமான நிலையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய முனையக் கட்டிடம் 17,341 சதுர மீட்டர் பரப்பளவில் 4 நுழைவு வாயில்கள், 21 செக்-இன் கவுண்ட்டர்கள், 3 ஏரோ பிரிட்ஜ்கள், மற்றும் 2 கன்வேயர் பெல்ட்கள் உள்ளன. ஒரு மணி நேரத்திற்கு 1,440 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 644 இருக்கைகள் மற்றும் 2 விஐபி ஒய்வு அறைகள் உள்ளன. ஓடுபாதையின் நீளம் 1,350 மீட்டரில் இருந்து 3,115 மீட்டராக விரிவாக்கப்பட்டுள்ளது. 45 மீட்டர் அகலம் கொண்ட ஓடுபாதை, மிகப்பெரிய ஏ-321 ரக ஏர்பஸ் விமானங்களும் தூத்துக்குடிக்கு இனி வந்து செல்ல முடியும். ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் விரிகுடா மற்றும் டாக்ஸி இணைப்பு வழி. புதிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ATC) கோபுரம், தீயணைப்பு நிலையம், மற்றும் தொழில்நுட்பத் தொகுதி. 500 பயணி வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி. தூத்துக்குடி-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்க 1 கி.மீ. இணைப்பு சாலை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
