நடத்தையில் சந்தேகம்... மனைவியை வெட்டிக் கொன்ற கணவர்!

 
கொலை

தூத்துக்குடி மாவட்டத்தில், மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். 

இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரணையில் வெளியான தகவல், தூத்துக்குடி முத்தையாபுரம் ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் நாகேந்திரன் (55). லாரி டிரைவர். இவரது மனைவி ரெஜினா மேரி (47). கூலி வேலைக்கு சென்று வருகிறார். ரெஜினா மேரியின் நடத்தையில் சந்தேகமடைந்த நாகேந்திரன் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி

இந்நிலையில், இன்று கணவன் மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகேந்திரன் மனைவி ரெஜினா மேரியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளார். இதில் படுகாயமடைந்து கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த முத்தையா புரம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் வழக்குப் பதிவு செய்து நாகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web