15 நிமிடம் வரை கூட டிக்கெட் முன்பதிவு ... வந்தே பாரத் ரயிலில் புதிய சலுகை!
வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்வதற்கு ரயில் நிலையத்தை அடைவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்புகூட, அந்த ரயிலுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஒரு ரயில் காலை 9 மணிக்கு திருச்சியை வந்தடையும் எனில் அந்த ரயிலில் ஏறும் பயணிகள், வந்தே பாரத் ரயிலின் இருக்கை வசதியைப் பொறுத்து, காலை 8:45 மணி வரை ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் விரைவு ரயிலில் இருக்கும் அனைத்து இருக்கைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் தெற்கு ரயில்வே இதுபோன்ற புதிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு ரயில் நிலையத்துக்கு வந்தே பாரத் ரயில் வருவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு வரை பயணிகள் ரயில் நிலையங்களிலிருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மண்டல ரயில்வேயால் இயக்கப்படும் 8 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வியாழக்கிழமை முதல் புதிய முறை அமலுக்கு வந்ததாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
