இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு... இந்த விதிமுறைகளைத் தெரிஞ்சுக்கோங்க.. இவற்றுக்கு எல்லாம் தடை!

 
டிஎன்பிஎஸ்சி

இன்று காலை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்துத் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான விதிமுறைகள், எவற்றுக்கு எல்லாம் தடை என்பதைத் தெரிந்து கொள்ளுங்க. தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களுக்கு சுமார் 20 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை இன்று எழுத இருக்கிறார்கள். 

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ), வனக்காவலர், பில்கலெக்டர், ஆவின் ஆய்வக உதவியாளர், இளநிலை நிர்வாகி, கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் மற்றும் பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் என பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6,244 பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியிட்டது. ஆன்லைனில் இதற்கான விண்ணப்பங்கள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை பெறப்பட்டன.

டிஎன்பிஎஸ்சி

குரூப் 4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) தேர்ச்சி என்றபோதிலும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், எம்ஃபில் முடித்தவர்கள் என உயர்கல்வி தகுதி பெற்றவர்கள் உட்பட சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு 2 வாரங்களுக்கு முன்பு ஆன்லைனில் ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று ஜூன் 9ம் தேதி குரூப் 4 எழுத்து தேர்வு காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு தேர்வுக் கூடத்துக்கு தேர்வர்கள் வந்துவிட வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

TNPSC குரூப் 1 ரிசல்ட் வெளியீடு!!

பொது தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்படும். அதே போன்று பொது அறிவு மற்றும் நுண்ணறிவு திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் வினாத்தாளில் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 

 குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் 2025 ஜனவரி மாதம் வெளியிடப்படும். குரூப் 4 தேர்வை தொடர்ந்து, ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் 28ம் தேதி வெளியிடப்பட உள்ளது. தேர்வு மையத்திற்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web