இன்று அனைத்து பள்ளிகளும் இயங்கும்... அரையாண்டு தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவு!

 
தேர்வு

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து அரசு பள்ளிகளும் இயங்கும். இன்று அரையாண்டு தேர்வு நடத்த பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த டிசம்பர் 9ம் தேதி தொடங்கிய இத்தேர்வுகள் டிசம்பர் 23 வரை நடைபெற உள்ளது.  ஆனால் வடகிழக்கு பருவமழை தீவிரத்தால் மாநிலம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கனமழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை வழங்கப்பட்டது.

தேர்வு

இதனால் அந்த நாட்களில் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகள் நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.  இதன்படி 6-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில தேர்வும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு சில பாடங்களுக்கான தேர்வும் நடைபெறவில்லை.

அந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என கேள்விகள் எழுந்து வந்த நிலையில்  விடுபட்ட அரையாண்டு தேர்வை இன்று டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை தேர்வு

இது குறித்து  தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த சுற்றறிக்கையில், "6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் 12ம் தேதி கனமழையால் விடுமுறை விடப்பட்டு நடத்த முடியாமல் போன அரையாண்டு தேர்வு இன்று டிசம்பர் 21ம் தேதி சனிக்கிழமை நடத்தப்பட வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web