சற்றே குறைந்த தங்கம் விலை... இல்லத்தரசிகள் ஆறுதல்!

 
நகை தங்கம் நகைக்கடை ஊழியர் சேல்ஸ் கேர்ள் பணிப்பெண்

 சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த மாதம் ஆகஸ்ட் 26 முதல்  கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.  அந்த வகையில் செப்டம்பர் 4ம் தேதி வரலாறு காணாத வகையில் ஒரு சவரன் ரூ.78000ஐ  தாண்டியது.

தங்கம் நகைக்கடை

நேற்று முன் தினம் இதுவரை இல்லாத வகையில், வரலாற்றில் முதல் முறையாக ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.80000ஐ கடந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை கடந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தங்கம் விலை ரூ 5000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.

தங்கம்

அதன்படி கிராமுக்கு ரூ35 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 9970க்கும்,  சவரனுக்கு ரூ. 280 குறைந்து, ஒரு சவரன் ரூ.79,760க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை குறைந்த அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து,  ஒரு கிராம் வெள்ளி ரூ.137க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ137000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?