இன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை! கலெக்டர் உத்தரவு!

 
டாஸ்மாக்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் 5வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடை விடுமுறை குறித்த அறிவிப்பு கடந்த இரு தினங்களுக்கு முன்பே கடைகளில் ஒட்டப்பட்டிருந்ததால், வழக்கத்தை விட நேற்று டாஸ்மாக் கடைகளில் ‘குடி’மகன்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலரும் இன்றைக்கும் சேர்த்து நேற்றே வாங்கி ஸ்டாக் வைக்க துவங்கினார்கள். டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே பாரில் மது வாங்கி அருந்திய இரண்டு பேர் தஞ்சையில் மரணமடைந்த நிலையில், அரசு அதிகளவில் டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வந்த  ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, கடந்த 2018ல் தொடர் போராட்டம்  நடைபெற்றது. அந்த பகுதியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்ட நாள் முதல் சுற்றுவட்டார கிராமத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும் ஆலையை மூடுவது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போராட்டத்தின் 100 வது நாளில் அடையாள போராட்டமாக அதிகப்படியான மக்களை ஒன்று திரட்ட போராட்டக்குழு முடிவு செய்தது. இதன் அடிப்படையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அன்றைய தினம் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் நேரத்தை மாற்றியது ஏன்? தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!!

சிறிது நேரத்தில் போராட்டக்களம் கலவர பூமியாக மாறியது.  இதனை கட்டுப்படுத்த காவல்துறை எத்தனையோ முயற்சிகளை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை.  காவல் துறையினருக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிடப்பட்டது. இதன்படி நடத்தப்பட்ட  துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள், 2 பெண்கள் என 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 40 பேர் படுகாயம் அடைந்தனர்.  64 பேருக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டன.  இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று மே 22ம் தேதி, கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு சம்பவம் நடைப்பெற்று ஐந்து வருடங்கள் கடந்து விட்டது. உயிரிழந்தோரின் 5வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

இந்நிலையில், இன்று ஏதும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடாமல் இருக்க, தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மே 22ம் தேதி திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மதுபான கடைகளும், பார்களும் மூடப்பட மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web