இன்று அட்சய திரிதியை... தங்கம் வேணாம்... இதைச் செய்தாலே செல்வம் சேரும்!

 
அட்சய திருதியை

இன்று அட்சய திருதியை திருநாளையொட்டி தங்கம் விற்கிற விலையில் இருக்கிற சேமிப்புகளை எல்லாம் கொண்டு போய் தங்கம் வாங்கியே ஆக வேண்டும் என்று செய்கூலியிலும், சேதாரத்திலும் பணத்தை வீணாக்காதீங்க. அட்சய திருதியைக்கு தங்கம் கட்டாயம் வாங்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. அட்சய திருதியை தங்கத்திற்கான நாள் கிடையாது. அது மகாலட்சுமிக்கான நாள். எதைச் செய்தாலும், மன மகிழ்வோடு செய்யுங்க. இன்று துவங்குகிற காரியங்கள் வெற்றியில் நிறைவடையும். இந்த நாளில் விரதம் இருந்து கடவுள் வழிபாடு செய்து பேறு பெற்றவர்கள் பலர்.

தங்கம் வாங்கினால் தான் செல்வம் சேரும் என்பதில்லை. இதை எல்லாம் செய்தாலுமே வாழ்வில் செல்வம் சேரும். இன்று என்னென்ன செய்யலாம் என்று பார்ப்பதற்கு முன்பாக, அட்சய திருதியை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தையடுத்த மூன்றாவது நாள் திருதியை திதி அனுசரிக்கப்படுகிறது. ஆனால் சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை தினத்தில் தான் அட்சய திருதியை அனுசரிக்கப்படுகிறது. இதே நாளில் தான் திருமால் மகாலட்சுமிக்கு தம் மார்பில் நித்திய வாசம் செய்ய   இடமளித்தார். அத்துடன் இதே நாளில்தான் செல்வத்தின் அதிபதிகளான ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என எட்டு லட்சுமிகளும் அஷ்ட லட்சுமிகளும் தோன்றிய தினம். இந்நன்னாளில் பொன், பொருள் வாங்கினால் அது மேலும் மேலும் வளர்ந்து செழிக்கும்.

தானம்

அட்சயம் என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.இந்த நாளில் தங்கம் வெள்ளி தான் வாங்க வேண்டும் என்பதில்லை. எந்த மங்களகரமான பொருள் வாங்கினாலும் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் கடாட்ஷமும் கிடைக்கும். அட்ஷய திருதியையான இன்று தானியங்கள், உப்பு, மஞ்சள், விளக்கு, வெண்கல மணி, லட்சுமி படம், பணம், குங்குமச்சிமிழ், சந்தனம், சர்க்கரை என எது வேண்டுமானாலும்  வாங்கலாம்.

அட்சய திருதியை
தங்கம் குருவையும், வெள்ளி சுக்கிரனையும் குறிக்கும். இவர்களின் அருள் நீடித்தால்  வீட்டில் செல்வம் பல்கி பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
அட்சய திருதியை இன்று மே 10ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.  அது தங்கமாக தான் இருக்க வேண்டும் என்பதில்லை. மஞ்சள், குங்குமம் போன்ற மங்கல பொருட்களையும் வாங்கலாம்.

அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். ஏழை , எளிய மக்களுக்கு நம்மால் இயன்றவரை இந்நாளில் தானம் செய்திட சுபிட்சமான வாழ்வு அமையும் என்பது ஐதிகம். செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு பெருகும். 

என்னென்ன தானம் வழங்கினால் என்னென்ன பலன்கள்?! 

தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.  ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம்.

குங்குமத்தை தானமாக வழங்கினால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும். 

மஞ்சளை தானமாக வழங்கினால் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம். 

வெல்லம், நெய், உப்பு இவைகளை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம். 

பால், தயிர் தானமாக வழங்கினால் செல்வ செழிப்பை பெறலாம். 

சந்தனத்தை தானமாக வழங்கினால்  ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.  இந்நாளில்  குலதெய்வத்தை பிரார்த்தனைச் செய்து, இஷ்ட தெய்வத்தை வணங்கி இயன்ற அளவு தானம் செய்திட வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி! 

From around the web