அட்சய திரிதியை மிஸ் பண்ணிட்டீங்களா? இன்றும் இதை தானம் செய்தால் முழு பலன்கள் கிடைக்கும்!

 
தானம்

நேற்று நகைக்கடைகள் நள்ளிரவு வரையில் திறந்து வைத்து, அட்சய திரிதியைக்கு வியாபாரம் செய்தன. போன வருடம் அட்சய திரிதியை அன்று இருக்கும் சேமிப்பு பணத்தை எடுத்துக் கொண்டு நகைக்கடைகளில் தங்கம் வாங்கியவர்கள் எல்லாம், இந்த வருடம் யோசிச்சு பாருங்க?

கடந்த வருடம் அட்சய திருதியையன்று நீங்கள் வாங்கிய தங்கம் குட்டி போட்டு வளர்ந்திருக்கிறதா என்று? அட்சய திருதியைக்கு கட்டாயம் தங்கம் வாங்க வேண்டும் என்று யாரோ கிளப்பி விட்ட புரளியை இன்று வரையில் கடைப்பிடித்து வருகிறோம். அட்சய திருதியை என்பது மகாலட்சுமிக்கான நாள். இன்று  காலையும் திருதியை நீடிக்கிறது. இன்று தானம் செய்யுங்க. அப்படி தானம் செய்யும் போது முழு மனசோட செய்யுங்க. எதைச் செய்தாலும், மன மகிழ்வோடு செய்கிற காரியங்கள்  முழு பலன்களைத் தரும். 

அட்சய திருதியை  நாளில் தான் திருமால் மகாலட்சுமிக்கு தம் மார்பில் நித்திய வாசம் செய்ய இடமளித்தார். செல்வத்திற்கு அதிபதிகளான ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என அஷ்ட லட்சுமிகளும் தோன்றிய தினம் அட்சய திருதியை நாள் தான்.

அட்சய திருதியை தினத்தில் இதை செய்தால் செல்வம் அதிகரிக்கும்!

அட்சயம் என்பது அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம்.இந்த நாளில் தங்கம் வெள்ளி தான் வாங்க வேண்டும் என்பதில்லை. எந்த மங்களகரமான பொருள் வாங்கினாலும் பெருகும். அஷ்ட லட்சுமிகளின் கடாட்ஷமும் கிடைக்கும். அட்ஷய திருதியை அன்று தானியங்கள், உப்பு, மஞ்சள், விளக்கு, வெண்கல மணி, லட்சுமி படம், பணம், குங்குமச்சிமிழ், சந்தனம், சர்க்கரை என எது வேண்டுமானாலும்  வாங்கலாம். தங்கம் குருவையும், வெள்ளி சுக்கிரனையும் குறிக்கும். இவர்களின் அருள் நீடித்தால்  வீட்டில் செல்வம் பல்கி பெருகும் என்பது காலம் காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.

தானம்

அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். ஏழை , எளிய மக்களுக்கு நம்மால் இயன்றவரை இந்நாளில் தானம் செய்திட சுபிட்சமான வாழ்வு அமையும் என்பது ஐதிகம். செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு பெருகும். புண்ணியங்கள் பெருகுகிறதோ இல்லையோ... நிச்சயமாக நமது முன் ஜென்ம பாவங்கள் கழிகிறது.

என்னென்ன தானம் வழங்கினால் என்னென்ன பலன்கள்?! 

தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும்.  ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம்.

குங்குமத்தை தானமாக வழங்கினால் கணவருக்கு நீண்ட ஆயுள் கிட்டும். 

மஞ்சளை தானமாக வழங்கினால் தீர்க்க சுமங்கலி யோகம் பெறலாம். 

வெல்லம், நெய், உப்பு இவைகளை தானமாக வழங்கினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம். 

பால், தயிர் தானமாக வழங்கினால் செல்வ செழிப்பை பெறலாம். 

சந்தனத்தை தானமாக வழங்கினால்  ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.  இந்நாளில்  குலதெய்வத்தை பிரார்த்தனைச் செய்து, இஷ்ட தெய்வத்தை வணங்கி இயன்ற அளவு தானம் செய்திட வாழ்வில் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web