இன்று பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348வது சதய விழா... திணறுது திருச்சி.... போக்குவரத்தில் அதிரடி மாற்றம்!

 
பெரும்பிடுகு முத்தரையர்

இன்று மே 23ம் தேதி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர ஒத்தக்கடை சந்திப்பில் அமைந்துள்ள பேரரசர் முத்தரையர் அவர்களின் திருவுறுவச் சிலைக்கு அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்ய உள்ளார்கள். இவ்விழாவில் திருச்சி மாநகர் மற்றும் திருச்சி மாவட்டத்தை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து பெரும் திரளான மக்கள் கலந்து கொள்வது வழக்கம். இவ்விழாவை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல்துறை சார்பாக சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், போக்குவரத்திற்கும் பொதுமக்களும் இடையூறின்றி விழா நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இது தவிர 14 ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் விழிப்புடன் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டுமெனவும், 9 சோதனை சாவடிகளில் போதுமான காவலர்கள் பணியிலிருந்து விழிப்புடன் பணிபுரியவும் மற்றும் முக்கிய போக்குவரத்து சந்திப்புகளில் சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் பொருட்டு 2 காவல் உதவி ஆணையர்கள் மேற்பார்வையில் 14 போக்குவரத்து காவல் அதிகாரிகள் மற்றும் 177 ஆளினர்கள் முக்கிய சந்திப்புகள் மற்றும் பிரதான சாலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 72 இடங்களில் போக்குவரத்து பணி செய்ய மாநகரம் முழுவதும் 3 காவல் துணை ஆணையர்கள், 12 காவல் உதவி ஆணையர்கள், 41 காவல் ஆய்வாளர்கள் உட்பட 1500 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் திரட்டப்பட்டு, 24 மணிநேரமும் கண்காணிக்க சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் இன்று முதலே ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா

இதற்காக போக்குவரத்தில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதன்படி காவல் சோதனைச் சாவடி-1 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் கருமண்டபம், மிளகுபாறை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, வெஸ்ட்ரி, KRT பெட்ரோல் பங்க், காவல் கட்டுப்பாட்டறை சந்திப்பு வழியாக பென்வெல்ஸ் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.

காவல் சோதனைச் சாவடி 2 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் மன்னார்புரம் மேம்பாலம், E.B.Office சர்வீஸ் சாலையில் இறங்கி, டி.வி.எஸ்.டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக வந்து பறவைகள் சாலையில் (Birds Road) வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.

காவல் சோதனைச் சாவடி 3 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக வந்து பறவைகள் சாலையில் (Birds Road) வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.

காவல் சோதனைச் சாவடி 4 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் பால்பண்ணை, ஜி-கார்னர், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக வந்து பறவைகள் சாலையில் (Birds Road) வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும். 

காவல் சோதனைச் சாவடிகள்5 மற்றும் 6 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் சஞ்சீவி நகர் சந்திப்பு, பால்பண்ணை, ஜி-கார்னர், டி.வி.எஸ். டோல்கேட், தலைமை தபால் நிலையம் வழியாக வந்து பறவைகள் சாலையில் (Birds Road) வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.

காவல் சோதனைச் சாவடி7 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் கரூர் பைபாஸ் சந்திப்பு, கே.டி.ஜங்சன், சாஸ்திரி ரோடு, மகாத்மா காந்தி பள்ளி சந்திப்பு, உழவர் சந்தை சாலை சந்திப்பு, MGR சிலை சந்திப்பு, நீதிமன்ற சாலை சந்திப்பு வழியாக வந்து அகில இந்திய வானொலி நிலையத்தின் அருகில் உள்ள குறுக்குச் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.

திருச்சி மலைக்கோட்டை

காவல் சோதனைச் சாவடி8 வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் புத்தூர் நான்கு ரோடு, MGR சிலை சந்திப்பு, நீதிமன்ற சாலை சந்திப்பு வழியாக வந்து அகில இந்திய வானொலி நிலையத்தின் அருகில் உள்ள குறுக்குச் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும்.

காவல் சோதனைச் சாவடி வழியாக முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்த வருபவர்கள் குழுமணி ரோடு, நாச்சியார் கோயில் சந்திப்பு, புத்தூர் நான்கு ரோடு, MGR சிலை சந்திப்பு, நீதிமன்ற சாலை சந்திப்பு வழியாக வந்து அகில இந்திய வானொலி நிலையத்தின் அருகில் உள்ள குறுக்குச் சாலையில் வாகனங்களை நிறுத்தி விட்டு வரவேண்டும். 

முத்தரையர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின்னர், வாகனங்களில் வந்தவர்கள் வந்த வழித்தடங்கள் வழியாகவே திரும்பிச் செல்ல வேண்டும் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு இவ்விழாவில் கலந்து கொண்டு விட்டு எம்.எல்.ஏவாக பதவியேற்க சென்ற மரியம்பிச்சை விபத்தில் காலமானார். அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக ஆர்வலர்கள் இன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web