இன்று கங்கா ஸ்நானம், லக்ஷ்மி குபேரரை வழிபட சிறந்தநேரம்... வழிபாட்டு முறைகள்!
இந்நாளில் அதிகாலை எண்ணெய் ஸ்நானம் புண்ணியமானதாக கருதப்படுகிறது. இன்று அக்டோபர் 20ம் தேதி அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஸ்நானம் செய்வது கங்கா ஸ்நானம் செய்த பலனை அளிக்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எண்ணெய் தடவி நீராடிய பின் புதிய ஆடைகள் அணிந்து, தீபம் ஏற்றி வீட்டை ஒளியால் நிரப்புவது வழக்கம்.

இந்நாளில் லக்ஷ்மி குபேரர் பூஜை சிறப்பாக நடைபெறும். செல்வம், செழிப்பு மற்றும் தடையின்மை வேண்டி “ஓம் லக்ஷ்ம்யே நம:” எனும் மந்திரத்துடன் அர்ச்சனை செய்யப்படுகிறது.
லக்ஷ்மி பூஜை முகூர்த்த நேரம் மாலை 7:08 மணி முதல் 8:18 மணி வரை என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பூஜை நறுமணம், மலர், தீபம், இனிப்புகள், பழங்கள் கொண்டு பூஜை செய்யப்படுகிறது.மண் மற்றும் கன்றின் சாணத்தால் செய்யப்பட்ட இயற்கை தீபங்கள் பயன்படுத்தி, ஒளியின் திருநாளை ஆன்மிகம், பசுமை மற்றும் அமைதியுடன் கொண்டாடுவது இந்த வருடத்தின் சிறப்பாகும்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
