இன்று கடைசி தேதி... தமிழக ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்... தேர்வு வாரியம் அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள், தற்போது காலியாக 33 வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று கடைசி தேதியாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசுக் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்கு, போட்டித் தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்தத் தேர்வுகளை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட 2023ம் ஆண்டுக்கான அட்டவணையில், தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும், அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கும் 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை வெளியிடப்படும்.
அதே நேரத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் 33 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கையும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 6,553 இடைநிலை ஆசிரியர்களை தேர்ந்தெடுக்கும் அறிக்கை மார்ச் மாதமும், பட்டதாரி ஆசிரியர்கள் 3,587 பேரை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை ஏப்ரல் மாதமும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 493 விரிவுரையாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிக்கை மே மாதமும் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதால் பல்வேறு தரப்புக்களிலிருந்தும் மிகக் கடும் விமர்சனங்கள் எழுந்தன. தலைவர் பதவிக்கு யாரும் நிரப்படாததும் இதற்கு குறிப்பிட்ட காரணம் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் உள்ள வட்டார கல்வி அலுவலர் பணிக்கான நேரடித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உடையவர்கள் https://www.trb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதில் வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். நேரடி நியமனமாக உள்ள இந்தத் தேர்வுக்கு தேர்வர்கள் இன்று ஜூலை 5ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!