இன்று ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு தொடக்கம்!!

 
ஆசிரியர் கலந்தாய்வு

தமிழகத்தில் பள்ளிகளில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அடுத்த கல்வியாண்டு தொடங்கப்பட உள்ளது.  இந்நிலையில் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக கலந்தாய்வு திருத்திய கால அட்டவணைகள் வெளியிடப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும்  தொடக்க பள்ளி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும். நாளை இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஆன பணி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு மே 26, இடைநிலை ஆசிரியர்களுக்கு மே 29ம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது


ஆசிரியர்


இந்நிலையில்    நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ஆசிரியர்களுக்கான பொது கலந்தாய்வு  தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக  அறிவித்தது. மீண்டும் மே 15ம் தேதி முதல் 26 ம் தேதி வரை நடைபெறும் எனக்  கூறப்பட்டிருந்தது.

கலந்தாய்வு

தமிழகத்தில்  அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும்  மே மாதம்  பதவி  உயர்வு மற்றும் பணியிட மாற்றம்  காரணமாக பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மே 8ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என  பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  இதற்காக ஆன்லைன் மூலம்  ஏப்ரல் 28ம் தேதி முதல் மே 3ம் தேதி வரை   பல்வேறு ஆசிரியர்கள் இடமாறுதல் வேண்டி விண்ணப்பித்து இருந்தனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web