இல்லத்தரசிகள் அதிர்ச்சி... தாறுமாறாக உயர்ந்த தக்காளி!
அரூர், தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் பகுதிகளில், 4,500க்கும் மேற்பட்ட ஏக்கரில், தக்காளி நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, சந்தையில் தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து வியாபாரிகள் அரூரில், கடந்த ஒரு வாரத்திற்கு முன், 28 கிலோ எடை கொண்ட ஒரு கூடை தக்காளி, ரூ500 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின், விலை அதிகரித்து ஒரு கூடை தக்காளி, ரூ 700 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று, தக்காளியின் விலை மேலும், உயர்ந்து ரூ 950 க்கு விற்பனையானது. அரூரில், தனியார் மண்டிகளுக்கு தக்காளி வரத்து பெருமளவு சரிந்துள்ளது.

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மழையால், தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு, தக்காளி தேவை அதிகரித்துள்ளது. அத்துடன், வெளிமாவட்டங்களுக்கு தக்காளி கொண்டு செல்லப்படுவதால் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. தக்காளி விலை உயர்ந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
