நாளை மே 1ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!
நாளை திங்கட்கிழமை மே 1ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில், மே தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நாளை மே 1ம் தேதி மூடப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுவாக விடுமுறை நாட்களில் தடையை மீறி யாராவது சட்டவிரோதமாக மது விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு, தமிழக மதுபான சில்லறை விற்பனை விதிகளின்கீழ், சென்னையில் உள்ள அனைத்து 'டாஸ்மாக்' கடைகளும், அனைத்து விதமான 'பார்'களும் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. மீறுபவர்கள் மீது மதுபான விற்பனை விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!
