நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!!

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் திடீரென மாரடைப்பால் காலமானார். ஒரு வருடமாக உடல் நலக்குறைபாடு காரணமாக அவதிப்பட்டு வந்த பங்காரு அடிகளார் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்கள், தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஆன்மீக சேவை மட்டுமின்றி கல்வி சேவை மற்றும் மருத்துவ சேவைகளையும் வழங்கி வந்தவர்.
தமது சேவைக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்றவர். ஆன்மீகத்தில் பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்தியவர். ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, பள்ளிகள் உட்பட பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பகுதியில் உள்ள ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்பினை வழங்கி, அவர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை உண்டு. இவரது ஆன்மீக சேவையை பாராட்டி இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இவரது பக்தர்கள் இவரை அம்மா என அழைக்கின்றனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளாரின் மறைவையொட்டி, நாளை அக்டோபர் 20ம் தேதி வெள்ளிக்கிழமை மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்துள்ளார். பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு வருவார்கள் என்பதால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!