நாளை இந்திய கிரிக்கெட் அணி பிரதமருடன் சந்திப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
இந்தியா சர்வதேச டி20 உலகக் கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. போட்டி முடிந்ததும் இந்தியா திரும்ப இருந்த நிலையில் அங்கு புயல் ஏற்பட்ட காரணத்தால் அவர்களது பயணம் ஒத்திப் போடப்பட்டது. அதன்படி இன்று இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியா வருகை தர உள்ளனர்.
இவர்கள் நாளை காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற உள்ளனர். நாளை டெல்லியில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி பிரதமரை சந்தித்து வாழ்த்து பெறுகிறது. நாளை காலை 11 மணிக்கு பிரதமரை சந்திக்கும் இந்திய கிரிக்கெட் அணி மாலை மும்பை செல்கிறது.
நாளை மாலை உலகக்கோப்பையுடன் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்திய வீரர்கள் பேரணியாக செல்கின்றனர். ரசிகர்கள் இந்த வேளைக்காக ஆர்வத்துடனும் எதிர்பார்ப்புடனும் காத்துக் கிடக்கின்றனர்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!