சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. ஒருவர் பலி.. பலர் படுகாயம்!
சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், சென்னையில் இருந்து குடும்பத்துடன் சென்ற பெண் உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை, கொடுங்கையூரைச் சேர்ந்தவர் சகாயராஜ் (38), தங்க நகைகள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். 11 பேர் கொண்ட தனது குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 29) காலை குடும்பத்தினர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், இன்று (ஏப்ரல் 30) காலை திருச்செந்தூரில் இருந்து டெம்போ வேனில் புறப்பட்டார். கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். தொடர்ந்து, கல்லாமொழி, பள்ளிவாசல் நுழைவு வாயில் நோக்கி வாகனம் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த மற்றொரு சுற்றுலா வேன் மீது நேருக்கு நேர் மோதியதில், டெம்போ வேன் கவிழ்ந்தது.
இதில், டெம்போவில் பயணம் செய்த சகாயராஜ் மனைவி சுமதி (37) பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கல்லாமொழி அனல்மின் நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சகாயராஜின் தந்தை ராமு (63), தாய் மேரி (60), மகன்கள் தன்ஷிக் (14), மனோஜ்குமார் (13), ரமேஷ் மகள் திவ்யதர்ஷினி (8), டெம்போ வேன் டிரைவர் குலசேகரன்பட்டினத்தை சேர்ந்த விஜயசங்கர் (38) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அவர்களில் மேரி (60) தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!