பகீர்!! மதுரை சித்திரை திருவிழாவில் 5 மர்ம மரணங்கள்!!
உலக புகழ் பெற்றது மதுரை சித்திரை திருவிழா. அந்த வகையில் சித்திரை திருவிழாவில் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். பக்தி பரவசத்துடன் பெரும் உற்சாகமாக இந்த விழா நடைபெற்றது.
உலக புகழ்பெற்ற திருவிழா என தமிழர்கள் ஒவ்வொருவரும் கூறி பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், இதே விழாவில் பல்வேறு வகையான விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று மக்களிடம் அதிருப்தியையும் சம்பாதித்துள்ளது.
அதாவது, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தின் கூட்டத்தை பயன்படுத்தி, ஒரு கும்பல் பொதுமக்களை தாக்கி நகை, பணம், செல்போன் உள்ளிட்டவற்றை பறித்துள்ளது. இந்த கும்பல் தாக்குதல் நடத்தியதில்ல 7 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில், வழிப்பறி கும்பலில் இருந்த எம்.கே.புரத்தைச் சேர்ந்த சூர்யபிரகாஷ், மதிச்சியம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று, திருவிழாவில் வேடம் அணிந்து பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநர் சுடலைமுத்து மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதற்கிடையே, நீரில் மூழ்கிய நிலையில் 3 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மதுரை விளாச்சேரி பகுதியை சேர்ந்த சிறுவன் பிரேம்குமார் உடல் கல்பாலம் அருகே மீட்கப்பட்டுள்ளது. திருநகர் பகுதியைச் சேர்ந்த ரவி மற்றும் அடையாளம் தெரியாத இளைஞர் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலில் நீரில் மூழ்கி பலியாகினரா அல்லது வேறு காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!