ச்சை... பாகிஸ்தானில் மிருகத்தனம்... இறந்தவர்களின் உடலை தோண்டியெடுத்து பலாத்காரம்.. கல்லறைக்கு பூட்டு போட்டு வைக்கும் அவலம்!

 
பாகிஸ்தான்

நமது அண்டை நாடான இலங்கை போன்று, பாகிஸ்தானும் தற்போது மிக மோசமான பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலையும் உச்சம் தொட்டுள்ளது. அதேநேரம் அங்கு அரசியல் குழப்பத்துக்கும் பஞ்சமில்லை.

இந்த நிலையில் அங்கு நடந்த மோசமான சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் இருக்கும் பல கல்லறைகளில் பூட்டுப் போட்டு வைக்கும் படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கான காரணம்தான் இந்த பரபரப்புக்கு காரணம். 

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில் பெண் பிணத்துடன் பாலியல் உறவு கொள்ளும் நெக்ரோபிலியா கேஸ்கள் அதிகரித்துள்ளதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உயிரிழந்த பெண்களின் பெற்றோர் பலர் இது தொடர்பாக புகார் தெரிவித்துள்ளனர். 

பாகிஸ்தான் பெற்றோர்கள் தங்கள் இறந்த மகள்களைக் கூட பலாத்காரத்தில் இருந்து பாதுகாக்க வேண்டி உள்ளதாகவும் இதன் காரணமாகக் கல்லறைக்கும் பூட்டுப் போட்டு வைக்க வேண்டி இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவிக்கிறார்கள். 

 அந்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர் ஹாரிஸ் சுல்தான் இது குறித்து பேசுகையில், கடுமையான இஸ்லாமியச் சித்தாந்தமே இதற்குக் காரணம். பாகிஸ்தான் பாலியல் விரக்தியுள்ள சமூகத்தை உருவாக்கியுள்ளது. இதன் காரணமாகவே இப்போது பாகிஸ்தான் மக்கள் தங்கள் இறந்த மகள்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதைத் தடுக்க அவர்களின் கல்லறைகளில் பூட்டுகளைப் போட்டுப் பூட்டுகிறார்கள். இதற்கு இங்கே இருக்கும் சில கடுமையான கட்டுப்பாடுகளே காரணம், என விமர்சித்தார்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் நாட்டில் பெண்களின் உடல்கள் பல நேரங்களில் தோண்டி எடுக்கப்பட்டு அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கராச்சியின் வடக்கு நாஜிமாபாத்தில் உள்ள கல்லறையில் பணிபுரியும் முஹம்மது ரிஸ்வான் என்ற காவலர் 48 பெண் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார். அங்கே 2011ஆம் ஆண்டு முதலே இதுபோன்ற நெக்ரோபிலியா வழக்குகள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web