வீட்டிற்குள்ளேயே சோகம்... சுற்றுசுவர் இடிந்து விழுந்ததில் 18 மாத குழந்தை பலி..!
வீட்டிற்குள்ளேயே விளையாடிக் கொண்டிருந்த 18 மாத பெண் குழந்தை, வீட்டின் சுற்று சுவர் இடித்து மேலே விழுந்ததில் பலியான சம்பவம் ஆழ்வார்குறிச்சி அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. அதே பகுதியில் கூலித் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகளான நிலையில் ஆதிரா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை இருந்தது.
இந்நிலையில்,நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் குழந்தை ஆதிரா, தனது தாத்தா மகேந்திரனுடன் (50) வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டின் முன்பக்க சுற்றுச் சுவர் இடிந்து குழந்தை ஆதிரா, மகேந்திரன் ஆகியோர் மீது விழுந்தது.
இதில் படுகாயம் அடைந்த ஆதிராவை அம்பை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவளை பரிசோதித்த மருத்துவர், குழந்தை ஆதிரா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மகேந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில், கடையம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மழை பெய்தது. இந்த மழையால் சுவர் நனைந்து இருந்தது. மறுநாளான நேற்று முன்தினம் அந்த சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை பலியானது தெரியவந்தது. வீட்டு சுற்றுச் சுவர் இடிந்து குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!