பிறந்தநாளிலேயே உயிரிழந்த சோகம்!! ரேபிடோ பைக் டாக்சியில் இருந்து கீழே விழுந்து இளம்பெண் பலி!!

 
சேவிகா

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் 39 வயது சேவிகா. இவர்  தனியார் தொலைக்காட்சியில் ஒப்பனை கலைஞராக பணி புரிந்து வந்துள்ளார். இன்று இவருக்கு பிறந்தநாள்  அதுவும் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை . இதனால் வியாசர்பாடியில் இருக்கும் தனது தாயை பார்க்க ரேபிடோ பைக் டாக்சியில் செல்ல முடிவெடுத்தார். 
தேனாம்பேட்டை மூப்பனார் பாலம் அருகே ரேபிடோ இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

ரேபிடோ

இதில்  பின்னால் அமர்ந்து பயணம் செய்த சேவிகா நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து  தேனாம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சேவிகாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

ஆம்புலன்ஸ்

அத்துடன் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து  வழக்கு பதிவு செய்து விபத்து நடக்க காரணமாக இருந்த ரேபிடோ வாகனத்தையும் அதன் ஒட்டுநரையும் தேடி வருகின்றனர். அதேசமயம் சேவிகாவை அழைத்துச் சென்ற பைக் டாக்ஸி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web