தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் போக்குவரத்தில் ஆகஸ்ட் 31 வரையில் மாற்றம்!

 
ஜனவரியில் புதிய வழித்தடத்தில் மின்சார ரயில்!! ரயில் பயணிகள் உற்சாகம்!!

ஆகஸ்ட் 31ம் தேதி வரையில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தெரிஞ்சுகோங்க. மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட கொடைரோடு-சமயநல்லூர் இடையே உள்ள ரயில் பாதையில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக அந்த பாதையில் செல்லும் ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிக்காக தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது 

ஈரோடு-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் (வ.எண்.16845) வருகிற 30ம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை-ஈரோடு பாசஞ்சர் ரயில் (வ.எண்.16846) வருகிற 28ம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு ஈரோடு புறப்பட்டு செல்லும்.

ரயில் தண்டவாளம் பராமரிப்பு கட்டுமானம்

அதற்கு பதிலாக, ஒரு சிறப்புக்கட்டண ரயில் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இருந்து ஈரோடு வரையிலும், ஒரு சிறப்புக்கட்டண ரயில் மதுரையில் இருந்து செங்கோட்டை வரையிலும் இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் செங்கோட்டையில் இருந்து மேற்கண்ட நாட்களில் அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.

அதேபோல, செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயில் (வ.எண்.16848) வருகிற 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விருதுநகரில் இருந்து அருப்புக்கோட்டை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16352) வருகிற 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி மற்றும் புதுக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

ரயில் தண்டவாளம் நடைமேடை ப்ளாட்ஃபாரம்

குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.16128) வருகிற 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.

கன்னியாகுமரி-ஹவுரா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (வ.எண்.12666) வருகிற 30ம் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.

கன்னியாகுமரி-ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரயில் (வ.எண்.07229) வருகிற 29ம் தேதி விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?