'பிரதமர் மோடி' க்கு டிரினிடாட் டொபாகோ இந்தியாவின் உயரிய விருது !

 
மோடி
 


 
பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடான கானாவில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  அங்கிருந்து கரீபியன் தீவு நாடான டிரினிடாட்-டொபாகோ சென்றுள்ளார். அங்கு மோடி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் அங்கேயே பிரதமர் மோடிக்கு பாரம்பரிய அணிவகுப்பும், ராணுவ மரியாதையும் வழங்கப்பட்டது. 1999-ம் ஆண்டுக்குப்பிறகு இந்திய பிரதமர் ஒருவர் டிரினிடாட் டொபாகோ செல்வது இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது.  கவுவாவில் திரண்ட ஏராளமான இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.  சுமார் 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட டிரினிடாட் டொபாகோவில் 45 சதவீதத்தினர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் அந்த நாட்டு பிரதமரும், இந்தியா வம்சாவளியுமான கமலா பெர்சாத் பிசேசர், மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என 4000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில்  பிரதமர் மோடி, இந்தியா விரைவில் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறும் என கூறினார்.  தான் கொண்டு சென்ற கும்பமேளா புனித நீரை அந்நாட்டு பிரதமர் கமலாவிடம் வழங்கினார். 

2 நாள் பயணமாக டிரினிடாட் டொபாகோ சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டின் உயரிய விருதான 'தி ஆர்டர் ஆப் தி ரிபப்ளிக் ஆப் டிரினிடாட் டொபாகோ' விருது வழங்கப்பட்டது. 140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி நெகிழ்ச்சி அடைந்தார்.  பிரதமரின் "சிறந்த அரசியல் திறமை, கொரோனா பெருந்தொற்றில் காட்டிய மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் செல்வாக்கு மிக்க உலகளாவிய தலைமைத்துவத்தை" அங்கீகரிக்கும் வகையில்  இந்த விருது வழங்கப்பட்டதாக  வெளியுறவு அமைச்சகம்  தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?