வீடியோ!! பீர் பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி விபத்து!! போட்டி போட்டி கொண்டு அள்ளிய குடிமகன்கள்!!

 
பீர் பாட்டில் லாரி

ஆந்திராவின் மண்டல் மாவட்டத்தில் உள்ள கசிம்கோடா பகுதியில் பீர் பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி  சாலை விபத்தில் சிக்கியது. பய்யாவரம் தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டிருந்த போது ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கசீம்கோட்ட மண்டலம் பையவரம் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது குறுக்கே இருசக்கர வாகனம் வந்ததால்  அதன் மேல் மோதாமல் இருக்க முயன்று சரக்கு வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.    


 

உடைந்துள்ள பீர் பாட்டில் காலில் குத்தி கொள்ளுமோ என்று கூட பார்க்காமல் கிடைத்த வரை லாபம் என ஒருவருக்கு எத்தனை பாட்டில் முடியுமோ அத்தனை உடையாத பீர் பாட்டில்களை போட்டி போட்டு கொண்டு எடுத்து சென்றனர்.இந்த விபத்தில் லாரி முழுவதுமாக  கவிழ்ந்ததில் லாரியில்  ஏற்றிச் செல்லப்பட்ட பீர் பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் சாலையில் விழுந்து உருண்டோடின . இதைப்பார்த்த உள்ளூர் மதுப்பிரியர்கள் முகம் மலர ஓடிவந்து மதுபாட்டில்களை  அள்ளி சென்றனர். தங்களால் எவ்வளவு கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவுக்கு பாட்டில்களை கையிலும் இடுப்பிலும் சொருகிக் கொண்டு சந்தோஷமாக சென்றனர்.

பீர் பாட்டில் லாரி

சில பெட்டிகளில் பீர் பாட்டில்கள் உடைந்து பீர் அனைத்தும் சாலையில் ஆறு போல் ஓடியது.   இப்படி உடைந்த பெட்டிகளுக்குள் ஏதேனும் பீர்கள் உடையாமல் இருக்கிறதா என மதுபானப் பிரியர்கள் தேடி தேடி எடுக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.இந்த விபத்து குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார்  பீர் பாட்டில்களை அள்ளி செல்ல முயன்ற மதுபானப்பிரியர்களை கட்டுப்படுத்தினர். அத்துடன் அவர்களின் கையிலும் இடுப்பில் இருந்த   பீர் பாட்டில்களை வாங்கி பத்திரப்படுத்தி வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web