நின்று கொண்டிருந்த பேருந்து மீது மோதிய லாரி.. 11 பேர் பலி.. 10 பேர் படுகாயம்!

 
ஷாஜகான்பூர்  விபத்து

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று  சீதாபூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு உத்தரகாண்ட் மாநிலம் பூர்ணகிரி கோயிலுக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. வழியில் குத்தார் பகுதியில் உள்ள கோலா மாநில நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தாபா அருகே இரவு உணவுக்காக பேருந்து நின்றது.

பேருந்தில் இருந்த பயணிகளில் பாதி பேர் இரவு உணவு சாப்பிட கீழே இறங்கினர், மீதமுள்ளவர்கள் பேருந்திலேயே இருந்தனர். இந்நிலையில் இரவு 11.100 மணியளவில் கல் ஏற்றி வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதி பேருந்து மீது கவிழ்ந்தது. பேருந்தில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் லாரியை அகற்ற முடியவில்லை. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை அப்புறப்படுத்தினர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!