2 நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷிய எல்லையில் நிலைநிறுத்த ட்ரம்ப் உத்தரவு!

 
ட்ரம்ப்


 
ரஷியா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முயற்சிகள் பலன் அளிக்காததால், ரஷியா மீது பொருளாதார தடையை அமெரிக்க அரசு விதித்து வருகின்றது. ரஷியாவிடம் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ட்ரம்பின் எச்சரிக்கையை மீறி ரஷியாவிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் காரணத்தால் இந்தியாவுக்கு 25% வரி விதிக்கப்பட்டது.   இந்தியா மற்றும் ரஷியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த பொருளாதாரங்கள் என டிரம்ப் விமர்சித்திருந்தார்.


இந்நிலையில், ரஷிய பாதுகாப்பு கவுன்சில் துணைத் தலைவரும் முன்னாள் அதிபருமான டிமிட்ரி மெட்வெடே தனது எக்ஸ் தளத்தில் "ரஷியாவுக்கு 50 நாள்கள், 10 நாள்கள் எனக் கெடு விதிக்கும் விளையாட்டை டிரம்ப் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் இரண்டு விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டும். ரஷியா இஸ்ரேலோ ஈரானோ கிடையாது. ஒவ்வொரு இறுதி எச்சரிக்கையும் ஒரு அச்சுறுத்தலாகும். போரை முன்னோக்கி எடுத்துச் செல்லும். ரஷியா - உக்ரைன் இடையே அல்ல, அவரது சொந்த நாட்டுடன்." என பதிவிட்டுள்ளார்.  

ட்ரம்ப்


அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டிரம்ப் " டிமிட்ரி மெட்வெடேவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்கும்  வகையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை ரஷியாவுக்கு பொருத்தமான பகுதிகளில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளேன். வார்த்தை மிகவும் முக்கியமானவை. அவை எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும்." என பதிவிட்டுள்ளார்.  இருப்பினும், எந்த பகுதிக்கு நீர்மூழ்கிக் கப்பல் அனுப்பப்பட்டுள்ளது, அணு ஆயுத தாக்குதல் நடத்தக் கூடிய கப்பல்களா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?