சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து... 40 தொழிலாளர்களுக்கு பைப் மூலம் ஆக்சிஜன் , தண்ணீர்..!!

 
சுரங்க விபத்து

உத்தராகண்ட் மாநிலத்தில்   சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் நடைபெற்றுவருகிறது.  சார்தாம் சாலையில்  உத்தர்காசியிலிருந்து யமுனோத்ரி தாம் வரையிலான பயணத்தை 26 கிலோமீட்டர் குறைக்கும் வகையில் இந்த   சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதையில் நேற்று  அதிகாலை 4 மணியளவில் 4.5 கி.மீ. நீளமுள்ள  200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் சுரங்கப்பாதையில் பணியில் இருந்த 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

சுரங்கவிபத்து

இச்சம்பவம் குறித்து  தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக   மீட்புப்படைகள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். எனினும், மீட்பு பணி முடிய 2 அல்லது 3 நாட்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  சுரங்கப்பாதையில் ஆக்ஸிஜன் குழாய் வைத்து தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மீட்புப்பணிகள்  குறித்து  உத்தராகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, "தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் உள்ளனர்.

சுரங்க விபத்து

உள்ளே சிக்கி உள்ள தொழிலாளர்கள் யாரும் உயிரிழக்கவில்லை. அவர்கள் சுவாசிக்க   துளைகள் வழியாக ஆக்சிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. அவர்களிடம் தொடர்பு கொண்டு     அனைவரையும் உயிருடன் பாதுகாப்பாக மீட்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்துள்ளார்.தொழிலாளர்கள் சுரங்கப் பாதைக்குள் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதால்   கவலையில் இருந்தனர். மீட்பு பணிகளில்  சக தொழிலாளர்கள் மற்றும் அந்த தொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொழிலாளர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பதால் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.  

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web