தவெக 2வது மாநில மாநாடு நடைபெறும் தேதி மாற்றம்!

 
தவெக விஜய்

தவெகவின் 2வது மாநில மாநாடு ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி, மதுரையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை தொடர்ந்து  ஜூலை 17ம் தேதி பந்தக்கால் நடும் பணி நடைபெற்றது. அன்றைய தினம் மதுரை மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் மாநாடு தொடர்பாக அனுமதி மனுவை அளித்துள்ளார்.  இதையடுத்து தவெக மாநாட்டின் ஏற்பாடுகள் பாரபத்தி பகுதியில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 தவெக

விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளதால், மாநாடு தேதியை மாற்றும்படி  தவெகவிடம் காவல்துறை தெரிவித்தது. இதையடுத்து ஆகஸ்ட் 17ம் தேதி மாநாடு நடத்திக்கொள்வதாக தவெக தரப்பில் காவல்துறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விஜய் ஆதவ்

சுதந்திர தினத்தை காரணம் காட்டி ஆகஸ்ட் 17ம் தேதியும் மாநாடு நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. வார இறுதி நாட்கள் அல்லாமல் 18 முதல் ஆகஸ்ட் 22ம் தேதிக்குள் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்யும்படி  காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தவெக மாநாடு தேதி தொடர்பான புதிய மனுவை காவல்துறையிடம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கொடுக்க இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?