மனைவியை கத்தியால் குத்தி கொலை... கணவனை துப்பாக்கியால் சுட்ட காதலன்!

 
பிரகாஷ்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி கல்லாவியை அடுத்த வெள்ளிமலையைச் சேர்ந்தவர் சின்னமுத்து (40), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சீதா (36). இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த சீதா, கடந்த 2 ஆண்டுகளாக குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.

கடந்த வாரம் சீதா ஆனந்தூரை அடுத்த செங்கல்நீர்பட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். கடந்த 22ம் தேதி, குடிபோதையில் செங்கல்நீர்பட்டிக்கு சென்ற சின்னமுத்து, அங்கிருந்து சீதாவை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். அப்போது சின்னமுத்து தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கூறியதால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சின்னமுத்து, சீதாவை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில், சீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: போச்சம்பள்ளியை அடுத்த கீழ்சங்கப்பட்டியை சேர்ந்த பிரகாஷ் (28) என்பவருக்கும், சீதாவுக்கும் தகாத உறவு இருந்தது. இதையறிந்த சின்னமுத்து, மனைவியை திட்டியதால், சீதா கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். ஆனால், அவள் பிரகாஷுடனான உறவைத் தொடர்ந்தாள்.

இந்நிலையில் சின்ன முத்து சீதாவை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். சின்னமுத்து, ராம்குமார் (20) மற்றும் 17 வயது சிறுவனுடன் அங்கு சென்றனர். மாந்தோப்பில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டபோது சீதாவின் காதலன் பிரகாஷ் அங்கு வந்துள்ளார். இவருக்கும் சின்னமுத்துவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், பிரகாஷ் அங்கிருந்து சென்றுள்ளார். அப்போது, சீதாவை, ராம்குமாரும், 17 வயது வாலிபரும் இறுகப் பிடித்து, சின்னமுத்து கத்தியால் குத்தி கொன்றனர்,' என்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சின்னமுத்து, ராம்குமார் உள்ளிட்ட 3 பேர் கொடமண்டப்பட்டி கூட்ரோடு பகுதியில் சுற்றித்திரிந்தனர். அப்போது அங்கு வந்த சீதாவின் காதலன் பிரகாஷ் நாட்டு துப்பாக்கியால் சின்னமுத்துவை சுட்டார். அதன்பின், பொதுமக்கள் பிரகாஷை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மேலும், சின்னமுத்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ராம்குமார் உள்ளிட்ட 2 பேரை போலீசார் நேற்று மாலை கொடமாண்டப்பட்டியில் கைது செய்தனர்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web