கோவிலில் இரு காவலர்கள் வெட்டிக்கொலை... பரபரப்பு!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில் நேற்று இரவு நடந்த கொலைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், நேற்றிரவு பேச்சிமுத்து (50), சங்கரபாண்டியன் (65) ஆகிய இருவர் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பணத்தை திருட முயன்றதாக தெரிகிறது.
அவர்களை தடுக்க முயன்ற காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், இருவரும் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக விரைந்து சென்று, இருவரின் உடல்களையும் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிலின் உண்டியல் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதால், திருட்டே காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மதுரை சரக டி.ஐ.ஜி அபினவ் குமார் மற்றும் எஸ்.பி கண்ணன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தடயவியல் நிபுணர்கள், மோப்ப நாய்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு சான்றுகள் சேகரித்து வருகின்றனர்.மேலும், கோவில் சுற்றுப்புறத்தில் உள்ள சிசிடிவி காட்சிகள் கைப்பற்றப்பட்டு, அக்கம் பக்கத்தினர் விசாரிக்கப்படுகின்றனர். இந்த சம்பவம் ராஜபாளையம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
