திருமணமாகாத விரக்தி.. தினமும் குடித்து விட்டு அலப்பறை.. அம்மா, பெரியம்மாவின் விபரீத முடிவால் அதிர்ச்சி!

 
சுரேஷ்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, தென்னாங்கூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணிக்கு முனியம்மாள் (வயது 65), ருக்மணி (61) ஆகிய 2 மனைவிகள் உள்ளனர். இருவரும் சகோதரிகள். இருவருக்கும் தலா 3 மகன்கள் உள்ளனர். இவரது கணவர் தெய்வசிகாமணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இதனால் முனியம்மாள் சென்னையில் உள்ள தனது மகன் வீட்டில் வசித்து வருகிறார். ருக்மணியின் 1வது மற்றும் 2வது மகன்கள் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இளைய மகன் சுரேஷ் (33). தச்சராக பணிபுரிந்து வருகிறார்.

அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலைக்குச் செல்லும் அவர், வீட்டிற்கு பணம் தருவதில்லை. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு வருகிறார். அப்போது அவரது தாயார் ருக்மணியிடம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தகராறு செய்துள்ளார். இந்நிலையில் சுரேஷின் பெரியம்மா முனியம்மாள் நேற்று சென்னையில் இருந்து சொந்த ஊரான தென்னங்கூர் கிராமத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சுரேஷ் தனது தாயிடம் குடிக்க பணம் கேட்டுள்ளார். அதற்கு ருக்மணி, "என்னிடம் பணம் இல்லை, ஏன் இங்கு குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்கிறாய். நீ வேலைக்குப் போய் சம்பாதித்து என்னிடம் கொடுத்தால் உனக்கு திருமணம் செய்து வைக்கலாம்" என்றாள்.

அப்போது வீட்டில் இருந்த பெரியம்மா, முனியம்மாளையும் தொந்தரவு செய்தார். இதனால் ஆத்திரமடைந்த முனியம்மாள், சுரேஷின் தலையில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் எரிச்சல் தாங்க முடியாமல் சுரேஷ் அலறி துடித்தார், பின்னர் நள்ளிரவு 12 மணி வரை ருக்மணியிடம் பணம் கேட்டுள்ளார். ருக்மணியும், பெரியம்மா முனியம்மாளும் பலமுறை அவரை அமைதிப்படுத்த முயன்றனர். மீண்டும் பணம் கேட்டதால் பொறுமை இழந்த தாய் ருக்மணியும், பெரியம்மா முனியம்மாளும் அருகில் இருந்த கட்டையால் சுரேஷை அடித்து, கற்களை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சுரேஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

நேற்று அதிகாலை வந்தவாசி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சப்–இன்ஸ்பெக்டர் ராம்குமார், சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷின் உடலை மீட்டனர். பின்னர் அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, ருக்மணி, முனியம்மாள் ஆகிய இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக தகராறு செய்த மகளை தாயும், பெரியம்மாவும் அடித்து கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web