ஓயாத கடன் தொல்லை.. ஒரே மகளை கொன்றுவிட்டு தாயும், தந்தையும் தற்கொலை!

 
ஜெகநாதன்

சென்னை மணலியில் தானிய வியாபாரக் கடை நடத்தி வந்தவர் ஜெகநாதன் (வயது 40). இவரது மனைவி லோகேஸ்வரி (வயது 33). இவர்களது மகள் காவ்யா (வயது 13).மணலியில் ஜெகநாதனுக்கு சொந்த வீடு உள்ளது. ஜெகநாதன் கடந்த 21020ம் ஆண்டு வீடு கட்ட 40 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். அதன் பிறகு வீடு கட்டும் பணி நடந்து வந்தது. இதற்கிடையில், கடனை திருப்பித் தரக் கோரி ஜெகநாத்தின் கடன் கொடுத்தவர்கள் அவரைத் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த ஜெகநாத் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதன்படி இன்று காலை தனது மகள் காவ்யாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொன்றுவிட்டு படுக்கையறையில் உடலை சாய்த்துள்ளார். பின்னர் ஜெகநாதனும், அவரது மனைவி லோகேஸ்வரியும் படுக்கையறையில் உள்ள மின்விசிறியில் அதே கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இன்று காலை ஜெகநாதனின் தாய் மகனுக்கு போன் செய்துள்ளார். ஆனால், போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அவர், வீட்டுக்கு வந்து சோதனையிட்டார். வீட்டின் கதவு மூடப்பட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது ஜெகநாதனும், அவரது மனைவியும்  தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கொலை

போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஜெகநாத் மற்றும் அவரது மனைவி லோகேஸ்வரி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். மகள் காவ்யா படுக்கையறையில் பிணமாக கிடந்துள்ளார். இதையடுத்து போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்னையால் மகளை கொன்று கணவன்-மனைவி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web