திமுக எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான திரையரங்கில் தீண்டாமை... நடவடிக்கை எடுக்குமா அரசு?!

 
நரிக்குறவர் தியேட்டர்

உபதேசம் எல்லாம் ஊருக்கு தான் என்பது போல தான் இருக்கிறார்கள் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் என்று புலம்புகிறார்கள் அந்த காட்சியை ட்விட்டர் வீடியோவில் பார்த்தவர்கள். திமுக எம்.எல்.ஏ. மூர்த்திக்கு சென்னை ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் சொந்தமாக ஐட்ரீம் திரையரங்கு உள்ளது. இந்த திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் தான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் ரோகிணி திரையரங்கில் நடந்ததுக்கு உடனடியாக அபராதம் விதித்து என்னென்னவோ செய்தார்கள். அப்படியும் திரையரங்க உரிமையாளர்கள், ஊழியர்கள் திருந்துவதாய் தெரியவில்லை. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான திரையரங்கிலேயே இப்படியென்றால்... வேறென்ன சொல்ல... நடவடிக்கை எடுக்குமா அரசு என்று ட்விட்டரில் கமெண்ட்கள் வந்து விழுகின்றன.


திமுக எம்எல்ஏ மூர்த்தியின் ஐ-ட்ரீம் திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தப் படத்தை பார்க்க குடும்பத்துடன் நரிக்குறவர் இன மக்கள் டிக்கெட் கவுண்டரில் சென்று 7 டிக்கெட் தருமாறு கேட்டுள்ளனர். அப்போது பணியில் இருந்த ஊழியர், 4 டிக்கெட் மட்டுமே இருப்பதாகவும் ஒரு டிக்கெட்டின் விலை 100 ரூபாய் எனவும் சீட்டுகள் தனித்தனியாக உள்ளது என்று கூறி அவர்களுக்கு டிக்கெட் தர மறுத்துள்ளார்கள். இதனால் அந்த பழங்குடியினர் திரையரங்கை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனை கவனித்து கொண்டிருந்த செய்தியாளர், உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக தனக்கு டிக்கெட் வழங்குமாறு கேட்ட போது, அவருக்கு டிக்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், நரிக் குறவ சமூக மக்கள் வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து, அந்த செய்தியாளர், தாம் வாங்கிய 7 டிக்கெட்களையும் நரிக்குறவ சமூக மக்களிடம் வழங்கினார்.

iDream

முன்னதாக, சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் ‘பத்து தல’ படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த மக்களை திரையரங்க ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர். டிக்கெட் இருந்தும் நாடோடிப் பழங்குடியினருக்குத் திரையரங்கத்திற்குள் அனுமதி மறுக்கப்பட்டது மிகப் பெரிய அளவில் சர்ச்சையாக உருவெடுத்தது. திரையரங்க நிர்வாகிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை ஐட்ரீம் திரையரங்கில் நரிக்குறவ மக்களுக்கு டிக்கெட் கொடுக்க மறுத்ததாக புகார் எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web