நாடு முழுவதும் அஞ்சலகங்களில் UPI வசதி... இனி பண பரிவர்த்தனை ரொம்ப சுலபம்!

 
அஞ்சலகம் தபால் போஸ்ட் ஆபீஸ்

நாடு முழுவதும் அஞ்சலகங்களில் UPI வசதி நடைமுறைக்கு ஆகஸ்ட் மாதம் முறை வரவுள்ளது. அனைத்து தபால் நிலையங்களும் டிஜிட்டல் மயமாக உள்ளன. இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

நாடு முழுவதும் தற்போது பெட்டிக்கடைகள் துவங்கி ரோட்டோர தள்ளுவண்டி கடைகள், பெரிய பெரிய மால்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஆனால் பொதுமக்கள் அதிகமாக பயன்படுத்தும் அஞ்சலகங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை.

அஞ்சலகம்

இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் அஞ்சலகங்களில் UPI மூலம் பணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

போஸ்ட் ஆபீஸ் தபால் நிலையம்

முன்னதாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செயல்படுத்த தபால் நிலையங்களில் QR குறியீடு அறிமுகப்படுத்தியது. ஆனால் தொடர்ச்சியான தொழில்நுட்ப சிக்கல்கள் மற்றும் வாடிக்கையாளர் புகார்கள் காரணமாக, இந்த நடைமுறை நிறுத்தப்பட்டது. தற்போது நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்து மீண்டும் டிஜிட்டல் பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது