தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிக கனமழை அலெர்ட்... பத்திரமா இருங்க மக்களே!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக 2 நாட்களுக்கு மழை வெளுத்து வாங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் , டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 26ம் தேதி வரை மழைக்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றும், நாளையும் தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜூன் 25ம் தேதி தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, பகுதிகளிலும் மிதமான மழையும், நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
