அசைந்தபடியே பவனி வந்த தஞ்சை பெரிய கோவில் தேரோட்டம்! விண்ணைப் பிளந்த ‘சிவ சிவ’ கோஷம்.. வைரலாகும் வீடியோ!

 
தஞ்சாவூர் தேரோட்டம்

தமிழரின் கட்டிடக்கலை, வரலாற்று சிறப்பு மிக்க கலை , கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக 1000 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமான ஆலயமாக திகழ்ந்து வருவது தஞ்சை பெரிய கோயில்.இங்கு ஆண்டு முழுவதும் உற்சவங்கள் நடைபெற்றபோதிலும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக 18 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைக் காண தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து மட்டுமல்ல இந்தியா , உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.


அந்த வகையி நடப்பாண்டிற்கான சித்திரை பெருவிழா ஏப்ரல் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிஅது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தஞ்சை பெரிய கோவில் தேர் திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தினமும் காலை, இரவு இரு நேரங்களிலும் சுவாமி விதவிதமான வாகனங்களில் வீதி உலா வருவது கண்கொள்ளா காட்சியாக அமைந்துள்ளது.  திருத்தேரோட்டம் இன்று காலை  பெரிய கோயிலின் அருகில் உள்ள மேல வீதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில், தியாகராஜ சுவாமி- அம்மன் எழுந்தருளிய நிலையில் சிறப்பு பூஜைகள், தீபாராதனை காட்டப்பட்டது. இதனை தொடர்ந்து தஞ்சாவூர்  கலெக்டர்  தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து சித்திரை தேரோட்டத்தை தொடங்கி  வைத்தார்.

தஞ்சாவூர்

சிவகணங்கள் முழங்க, தாரை தப்பட்டை, நாதஸ்வர இசையுடன் பாரம்பரிய இசை முழங்க பல்லாயிரக்கணக்கான சிவ பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து முழக்கங்களை எழுப்பி வழிபட்டனர்.

மேல வீதியில் தொடங்கிய  திருத்தேர் கொங்கனேஸ்வரர் கோயில், மூலை ஆஞ்சநேயர் கோயில், வடக்கு வீதி ரத்தினபுரீஸ்வரர் கோயில், கீழராஜ வீதி , தெற்கு வீதி உள்ளிட்ட நான்கு ராஜ வீதிகளின் வழியாக சென்று மீண்டும் மேல வீதியில் நிலைக்கு சென்றுள்ளது.  இந்நிகழ்ச்சியை காண தஞ்சை மட்டுமின்றி திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web