ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க... .விஜய பிரபாகரன் நெகிழ்ச்சி பதிவு!
![விஜய பிரபாகரன்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/2e151b7c65bb59e7a3f80b4502e455a6.png)
தமிழகத்தில் 40 இடங்களிலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி அடைந்துள்ளது. விருதுநகர் தொகுதியில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி அடைந்துள்ளார். இவர் 3,85,256 வாக்குகள் பெற்றுள்ளார் . அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்றுள்ளார்.
வாக்கு வித்தியாசம் வெறும் 4379 தான் இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகா சரத்குமார் 1,66,271 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். இதன் மூலம் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாகூர் , விஜய பிரபாகரனைத் தவிர அனைவரும் டெபாசிட் இழந்தனர்.
இது குறித்து விஜய பிரபாகரன் தனது சமூக வலைதள பக்கத்தில், மன்னித்து விடுங்கள் சிறிய வித்தியாசத்தில் தோற்றுவிட்டேன். எனக்கு வாக்களித்த அனைத்து அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி. இது முடிவு கிடையாது தொடக்கம் தான் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!