வைரல் வீடியோ!! பிடிபட்டது அரிக்கொம்பன் யானை !!
அரிகொம்பன் யானையினை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க 5 நபர்கள் அடங்கிய கால்நடை மருத்துவர்கள் குழு மற்றும் 3 கும்கி யானைகள் கம்பம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டன. கால்நடை மருத்துவர்கள் அடங்கி குழுவானது வனத்துறை அலுவலர்கள் தலைமையில் யானையின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வந்தது. ஆனால் அதற்குள் அரிக்கொம்பனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்ற யானை அங்கிருந்து வனத்துறை வாகனம் மற்றும் ஆட்டோ ஒன்றை தாக்கியது.
அரிக்கொம்பன் யானை பிடிபட்டது!! pic.twitter.com/mXnxyfzJyo
— Dina Maalai (@DinaMaalai) June 5, 2023
அத்துடன் யானையை பார்ப்பதற்காக அந்த வழியில் சென்ற கம்பம் ஆச்சாரியர் தெருவில் வசித்து வரும் பால்ராஜையும் தாக்கியது. இதனால் பாதிக்கப்பட்ட அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பலியானார். இந்நிலையில் கம்பம் அருகே சண்முகா அணை பகுதியில் 7 நாட்களாக சுற்றி திரிந்த அரிசி கொம்பன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. யானையை வேறு பகுதிக்கு கொண்டு செல்ல மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தின் பல பகுதிகள் அடர் வனப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து விட்டது.
இதற்குள் 'அரிக்கொம்பன்' யானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனை பிடிப்பதற்காக மே 28ம் தேதி சுயம்பு, உதயன், அரிசி ராஜா (எ) முத்து ஆகிய 3 கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டன. இந்நிலையில் அரிக்கொம்பன் யானை உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகநாதர் கோவில் வனப்பகுதியில் சுற்றித்திரிவதாக கூறப்பட்டது. அந்த யானை வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டி வந்த நிலையில் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!