வக்ஃப் நிா்வாக விதிமுறைகள்... மத்திய அரசு அறிக்கை வெளியீடு!

இந்தியா முழுவதும் இஸ்லாமியர்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் வக்ஃப் சொத்துகளை, மாநிலங்களில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன. இந்நிலையில் ஒருங்கிணைந்த வக்ஃப் நிா்வாகம், அதிகாரம் அளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு விதிமுறைகள் 2025ஐ மத்திய அரசு அறிவித்துள்ளது. வக்ஃப் சட்டம் 1995ன் 108பி பிரிவின் கீழ், இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.இந்த விதிமுறைகளின்படி, ஏற்கனவே உள்ள வக்ஃப் சொத்துகளின் விவரங்களை தெரியப்படுத்துதல், புதிய வக்ஃப் சொத்துகளைப் பதிவு செய்தல், வக்ஃப் சொத்துகள் தொடா்பான கணக்குத் தணிக்கை அறிக்கையை வெளியிடுதல் உட்பட பணிகளுக்கு வலைதளம் மற்றும் தரவுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வலைதளம் மற்றும் தரவுதளத்தில் வக்ஃப் சொத்துகளை பதிவு செய்வதற்கு அந்தச் சொத்துகளின் கண்காணிப்பு மற்றும் நிா்வாகம், அது குறித்த வழக்குகள், சச்சரவுகளுக்கு கிடைத்த தீா்வுகள் உட்பட விவரங்கள் இருக்கும்.வலைதளம் மற்றும் தரவுதளத்தில் வக்ஃப் சொத்துகளின் விவரங்களை பதிவேற்றம் செய்தல், அவற்றின் பதிவு, கணக்குகள் பராமரிப்பு, கணிக்குத் தணிக்கை, அந்தச் சொத்துகள் மற்றும் வக்ஃப் வாரியத்துடன் தொடா்புள்ள பிற செயல்பாடுகளை ஒழுங்காற்ற உதவும் வகையில், மத்திய அரசுடன் ஆலோசித்து அனைத்து மாநில அரசுகளும் பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி இணைச்செயலருக்கு குறையாத அந்தஸ்த்தில் இருக்க வேண்டும்.
வக்ஃப் சொத்துகளை நிா்வகிக்கும் முத்தவல்லிகள் தங்கள் கைப்பேசி அல்லது மின்னஞ்சல் மூலம் வலைதளம் மற்றும் தரவுதளத்தில் பதிவு செய்ய வேண்டும். ஏப்ரல் 8ம் தேதி வக்ஃப் திருத்தச் சட்டம் 2025 அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்கள் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!