சென்னையில் 2,00,000 தெருநாய்கள்... வார்டு வாரியாக கணக்கெடுப்பு தீவிரம்!
![நாய்](https://www.dinamaalai.com/static/c1e/client/93068/uploaded/a131e7b90dc79c1a1240fc09845deb87.png)
சென்னை முழுவதும் நாய்களால் தொந்தரவுகள், விபரீதங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து தெரு நாய்களுக்கு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது· சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி முகாமை தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கால்நடை மருத்துவர்கள், விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ” தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் இன்று 150 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியாவிலேயே ஒரே நாளில் நாய்களுக்கு 50ல் இருந்து 66 கருத்தடைகள் தமிழகத்தில் மட்டுமே நடைபெறுகிறது. விலங்குகள் நல வாரிய விதிமுறைகள் படி நாய்களை கட்டுப்படுத்துவதற்கு கருத்தடை செய்வதால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும், மற்ற நாடுகளில் இருப்பது போன்று எந்த நாய்களையும் அப்புறப்படுத்த முடியாது. அது போன்ற சட்டம் இந்தியாவில் இல்லை. நாய்க்கடி பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகள் மற்றும் வல்லுநர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும். செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் முறையான சான்றிதழ்களை பெற வேண்டும். பாதுகாப்பற்ற முறையில் செல்லப்பிராணி வெளியில் எடுத்துச் செல்வதை உரிமையாளர்கள் பின்பற்ற வேண்டும். செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்லும் போது நமக்கு சாதகமான சூழல் இருந்தாலும் மற்றவர்களுக்கு பாதகம் விளைவித்து விடும் அபாயங்கள் நேரலாம். இதனால் நாய் உரிமையாளர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
சென்னையில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் உள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நாய்கள் கணக்கெடுப்பு செய்யப்படும். வெளியில் நாய்களை அழைத்து செல்லும் போது அவைகளுக்கு முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும் என உத்தரவிட மாநகராட்சிக்கு அதிகாரம் இல்லை. கயிறு கட்டி வெளியே அழைத்துச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே கூற முடியும் . பொது இடங்களுக்கு செல்லும்போது தெரு நாயாக இருந்தாலும், வளர்ப்பு நாயாக இருந்தாலும் மற்றவர்களை கடிக்கக்கூடும். எனவே உரிமையாளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்” என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!