பகீர் வீடியோ.. பூஜைக்கு வந்த புது கார்... ஆக்ஸிலேட்டரை மிதித்ததால் கோயிலுக்குள் புகுந்து விபரீதம்... அலறிய பக்தர்கள்!

 
கோயிலுக்குள் கார்

கடலூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயிலுக்குள் பூஜை போடுவதற்காக ஆசையாசையாக புதிய காரை ஓட்டிச் சென்ற நிலையில், கோயிலுக்கு அருகே காரில் சென்றதும், பிரேக் பிடிப்பதற்கு பதிலாக காரின் ஆக்ஸிலேட்டரை தவறுதலாக மிதித்ததால் கார், கோயிலுக்குள்ளே வேகமாக நுழைந்து விபத்துக்குள்ளானது. திடீரென கோயிலுக்குள் கார் நுழைந்ததைப் பார்த்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.  


 

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பூவராக சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அரியலூர் மாவட்டம் பெரிய கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுதாகர்(42) என்பவர் தான் வாங்கிய புதிய மாருதி சுசுகி ஈகோ வாகனத்தை பூஜை போடுவதற்காக குடும்பத்துடன் எடுத்து வந்து கோயில் முன்பாக நிறுத்தினார். பின்னர் கோயில் உள்ளே சென்று பூஜைகள் மற்றும் தரிசனம் முடித்துவிட்டு தனது வாகனத்தை எடுக்க முற்பட்டபோது சுதாகர் தவறுதலாக பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் திடீரென கட்டுப்பட்டை இழந்து கோயில் உள்ளே நுழைந்து மண்டபத் தூணில் இடித்து நின்றது.

கோயிலுக்குள் கார்

இதனைக் கண்ட சுவாமி தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். கோயிலுக்குள் இருந்த பணியாளர்கள் காருக்குள் இருந்த சுதாகரை பத்திரமாக மீட்டனர். நல்வாய்ப்பாக சுதாகருக்கு ஏதும் ஆகவில்லை. புதிய சொகு கார் முன்பக்கம் மட்டும் சேதமடைந்தது. இது குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் புதிய, பூஜை போட வந்த கார் கோயிலுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web