நிலவில் நீர் துகள் கண்டறிந்த சாதனை... சந்திரயான்-1 மிஷன் இயக்குநர் ஸ்ரீனிவாஸ் ஹெக்டே காலமானார்!

 
ஸ்ரீநிவாஸ் ஹெக்டே

சந்திரயான்-1 இயக்குநராக பணிபுரிந்த  முன்னாள் இந்திய விஞ்ஞானி ஸ்ரீனிவாஸ் ஹெக்டே பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவருக்கு வயது 71. இவர்  சிறுநீரக செயலிழப்பு காரணமாக பெங்களூருவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் உயிரிழந்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன . இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

இஸ்ரோ
நிலவின் ரகசியங்களை ஆராய்வதற்காக  ISRO சார்பில், முதன்முதலாக சந்திரயான்-1 திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கான பணிகள், 22 அக்டோபர் 2008 முதல் 28 ஆகஸ்ட் 2009 வரை நடந்த நிலையில், அதன் திட்ட இயக்குநராக ஸ்ரீநிவாஸ் ஹெக்டே இருந்தார்.  1978 2014 வரை  இஸ்ரோவில் பணிபுரிந்த ஸ்ரீநிவாஸ், UR ராவ் செயற்கைக்கோள் மையத்தின் உறுப்பினராக இருந்தவர். ஆயிரக்கணக்கான விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளிலும் கலந்து கொண்டவர்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!